பல்லடத்தில் உழைப்பாளர் தினத்தில் அரங்கேறிய விபத்து - ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தொழிலாளி காயம்!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் செயல்பட்டு வரும் E-STAR என்ற டீ தூள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தங்கும் விடுதியில் உள்ள 24 கழிப்பறைகள் இன்று அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற உழியர் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறை இடிந்து விழுந்ததில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள எம்.வி.எஸ் நகரில் E-Star என்ற டீ தூள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.



ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு அருகிலேயே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக 24 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.



இன்று அதிகாலை திடீரென 24 கழிப்பறைகளும் முழுவதுமாக சரிந்து விழுந்து சேதம் அடைந்தது.



இந்த விபத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கு காலில் காயமடைந்த நிலையில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தரமான அஸ்திவாரம் போடாமலேயே கழிப்பறைகள் கட்டப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் தினத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...