கோவையில் ‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கோவை இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் இன்று நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் இன்று முதல் ஜூன் 15 வரை நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்படி இன்று முதல் 15ம் தேதி முடிய Mass Cleaning அனைத்து பொது இடங்களிலும் தூய்மை காவலர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், NNS மற்றும் NCC மாணவர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளது.

மே 8 ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை உடல் நலம் பேணுதல் தொடர்பாக தூய்மை காவலர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவர்களை கொண்டு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. மேலும் சுத்தம் மற்றும் பசுமை கிராமம் தொடர்பாக MGNREGS பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்படவுள்ளது.

இதனையடுத்து மே 15 முதல் 27ஆம் தேதி வரை நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல், சுகாதாரம் பேணுதல் தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.

மே 29 முதல் ஜூன் 03 வரை அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட நெகிழிகளை தடை செய்து அதற்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

முதன்மைக்கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகளை கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம், நீர், கழிவு மேலாண்மை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...