மே தினத்தன்று உடுமலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை - வைரல் வீடியோ

உடுமலை கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் மே தினத்தன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மே தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் உடுமலையில் பெரும்பாலான இடங்களில் மது விற்பனை கள்ளச் சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக கல்பனா தியேட்டர் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை, அர்பன் பேங்க், தாராபுரம் ரோடு அரசு மதுபான கடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி-க்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர்.



இதற்கிடையில் கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...