பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வசந்தகால மலர் வழிபாடு - பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை ஏற்பாடு!

கோவையில் பிரசித்திபெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில் வசந்தகால மலர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பாக மலர் வழிபாடு நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக நடைபெறமால் இருந்த மலர் வழிபாடு இந்த ஆண்டு வெகு சிறப்பாக தொடங்கியது.



கோடை காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அர்த்த கால பூஜையாக இந்த பூஜை நடைபெற்றது. இதில், சுமார் 400 கிலோ அளவிலான அரிய வகை மலர்களை கொண்டு சிறப்பு மலர் வழிபாடு செய்யப்பட்டது.



தாமரை, அரளி, செண்பகம், பாரிஜாதம், வாடாமல்லி, வெச்சி, மருகு, மரிக்கொழுந்து, என 48 வகை மலர்களை கொண்டு மூலவரான சிவனுக்கு மலர் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.



பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை தலைவர், முனைவர் இலட்சுமிபதிராசு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...