கேரளாவிலிருந்து கடத்தி வந்த கஞ்சா பறிமுதல் - கோவையில் 2 பேர் கைது

கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை தடாகம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முத்துராஜ் மற்றும் ரஞ்சித் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் தடாகம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் ஜனா, ராமு, வசந்த் உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் இருவரும் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் சத்தியமங்களத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பது உறுதியானது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்தி வந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...