பூஜ்ய மதிப்பு திட்டத்தை ரத்து செய்யக் கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

தாராபுரத்தில் உழவர்களின் உரிமைபெற்ற இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக இந்து அறநிலைத்துறையும், வக்பு வாரியமும் உரிமை கோரி பூஜ்யம் மதிப்பு செய்யும் திட்டத்தை ரத்து செய்யகோரி தாராபுரத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உழவர்களின் உரிமை பெற்ற இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக பூஜ்ய மதிப்பு செய்வதை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தமிழ்நாட்டில் சிறு இனாம்கள் ஒழிப்பு சட்டம் -1963 இயற்றப்பட்டு அதற்கென செட்டில்மென்ட் தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உரிய விசாரணைக்கு பிறகு நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு ரயத்துவரி பட்டா வழங்கபட்டன.

இந்த நிலையில் அந்த நிலங்களை பத்திரபதிவு துறையும், வக்பு வாரியமும் இணைந்து சட்டவிரோதமாக ஆவணங்களில் பூஜ்ஜியம் மதிப்பு செய்ய துவங்கி உள்ளனர். சிறு, குறு விவசாயிகளை பாதிக்கும் இச்செயலை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை 12 லட்சம் ஏக்கர் நிலங்களையும் வக்பு வாரியம் 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் பத்திரபதிவு துறை மூலமாக பூஜ்ஜியம் மதிப்பு செய்யும் செயல் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



எவ்வித அரசாணையும் இல்லாமல், நீதிமன்ற உத்தரவும் இல்லாத நிலையில் இந்த நில அபகரிப்பை உடனடியாக கைவிட கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்த்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அரசு இந்த சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தபோவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...