துடியலூர் சுற்றுவட்டாரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை தொடர்ந்து 2 மணி நேரம் விடாமல் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


கோவை: துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கோவையில் காலை முதல் வெயில் அடித்த நிலையில் பிற்பகலுக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.



தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், இடிகரை, ஜி.என்.மில்ஸ், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.



கனமழை காரணமாக குலிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...