கோவையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு - விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!

கோவை‌ மாநகராட்சி கோணவாய்க்கால்பாளையம்‌ மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கல்பனா, பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.99 மற்றும்‌ 85க்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம்‌ பகுதியில்‌ நெடுஞ்சாலைத்துறை மூலம்‌ நடைபெற்று வரும்‌ மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர் மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை 15 தினங்களுக்குள்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,‌ சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்‌.



அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.79க்கு உட்பட்ட செல்வபுரம்‌ பகுதியில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா‌, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகாலை தூர்வாரவும்‌, புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...