இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக ஓடி வந்து உதவிய கோவை போலீசார்!

உதகையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க பாண்டிச்சேரிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையில் வேகமாக செல்வதற்காக கோவை மாவட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி உதவி செய்தனர்.


கோவை: உதகையைச் சேர்ந்த பெண்ணை விமான நிலையம் மூலம் பாண்டிச்சேரிக்கு கொண்டு செல்ல மாவட்ட போக்குவரத்து சார்பில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வழிவகை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக உயர் சிகிச்சை அளிக்க உடனடியாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால் அப்பெண்ணின் குடும்பத்தார் கோவை மாவட்ட காவல் துறையினரை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் பாண்டிச்சேரிக்கு எந்தவித போக்குவரத்து இடையூறும் இன்றி விரைவாக செல்ல உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் துறையினர் ஆகியோர் இணைந்து மேற்படி பாதிக்கப்பட்ட பெண் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு சாலையில் எந்தவித இடையூறும் இன்றி செல்ல வழிவகை ஏற்படுத்தி கொடுத்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை மனதார பாராட்டினர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...