கோவை அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - பழக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் பலி

கோவை மலுமிச்சம்பட்டி அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பழக்கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுநரான அகேஷ்குமார் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவி (வயது45).

இவர் தனது மகள் கல்லூரி படிப்பிற்காக தற்போது கோவை ஒத்தக்கால் மண்டபம் அசோக் ரெசிடென்சி பகுதியில் குடும்பத்துடன் தங்கி, மலுமிச்சம்பட்டி அருகே கந்தன் ப்ரூட் ஸ்டால் என்ற பழக்கடை வைத்துள்ளார். இவரது கடையில், ஒத்தக்கால்மண்டபம் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமன் (வயது50). என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11 மணியளவில் ரவியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். அப்போது பொள்ளாச்சி - கோவை சாலையில் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே அவர்களது வாகனம் வேகமாகச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட ரவி மற்றும் ராமன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுனரான அகேஷ்குமார் (24) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...