திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் விபரீத முயற்சி - கணவர் மீது போலீசார் பொய் வழக்குப்போட முயற்சிப்பதாக புகார்

திருப்பூரில் கணவர் மீது பொய்யாக கொலை முயற்சி வழக்குப் போட போலீசார் முயற்சிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செண்டிலா என்ற பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழக்கம்போல பரபரப்பாக இன்று காலை இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், குழந்தைகளுடன் ஒரு பெண் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தார். ஆட்சியர் அலுவலக இரண்டாவது தளத்திற்கு சென்ற அந்த பெண், திடீரென தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.



இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அந்தப் பெண் பெயர் செண்டிலா (வயது35) என்பதும், திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் வசித்து வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், தனது கணவர் லட்சுமணன் மீது நல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பொய்யாக போடுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும், கணவர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...