யானைகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்..! - அமைச்சர் மதிவேந்தன் தகவல்

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த யானை முகாமை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், யானைகள் சேதப்படுத்தும் விவசாய பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


கோவை: டாப்சிலிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.



இன்று யானைகள் முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது யானைகள் முகாம் மற்றும் யானைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் இடங்களையும் ஆய்வு செய்தார்.



மேலும் யானை பாகங்களிடம் நலம் விசாரித்து அவர்களது குறைகளை கேட்டு கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.



தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானைகளை பிடிப்பதற்கு உதவியாக இருந்த கும்கி யானை பாகன்களை அமைச்சர் மதிவேந்தன் பாராட்டினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானைகளுக்கு பிடித்த கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதியில் ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு வனவிலங்குகள் வருவதை முழுமையாக தடுக்க இயலாது.பயிர்கள், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கடந்த காலங்களில் இல்லாத வகையில் முதல்வர் தற்போது ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

பயிர் சேதம் ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பிரச்னைகளை கையாண்டு வருகிறது. வன கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள மருத்துவர்களை கொண்டு யானைகளுக்கு ஏற்படும் தொற்று நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டு உடனடி நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.

வன கால்நடை மருத்துவர்கள் நியமனம் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியம் , துணை இயக்குநர் பார்க்கவ் தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம் மற்றும் உலாந்தி வனச்சரகர் சுந்தரவேல் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...