முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து கோவையில் ஆட்சியர் தலைமையில் நிலைக்குழு கூட்டம்!

முதலமைச்சர் காலை உணவு திட்டமானது வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது தொடர்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இரண்டாம் கட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் கல்வி ஆண்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மகளிர் திட்ட இயக்குனர் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் சத்துணவு திட்ட நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்டத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் இந்த காலை உணவு திட்டத்தை 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...