ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் - பல்லடம் காவல்நிலையத்தில் புகார்!

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, சூலூரில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர், அதே பேருந்தில் பணி முடிந்து கோவை ஒண்டிப்புதூரில் இருந்து வீடு திரும்பிய பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனால், அந்தப் பெண் பேருந்து ஓட்டுனரிடம் பேருந்தை பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால், பயணிகளோடு அரசு பேருந்து ஓட்டுநர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அந்த இளைஞரிடம் மகளிர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென பயணிகளோடு அரசு பேருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...