கட்டடப் பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் - தமிழக அரசுக்கு பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் பொறியாளர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா நடைபெற்றது.

அதில், சங்கத்தின் 2022 ஆம் ஆண்டில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.



இதன் தொடர்ச்சியாக பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக சிற்பி செல்வராஜ், துணை தலைவராக மோகனகண்ணன், செயலாளர் தனபால்,பொருளாளர் பொன்.சக்திவேல், ஆகியோர் உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டனர்.



முன்னாள் பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிட பொறியாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மோகன் ராஜா, தமிழ்நாடு முழுவதும் கட்டுமான தொழிலை நம்பி 10 ஆயிரம் கட்டிட பொறியாளர்களும் 50 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதேபோன்று பட்டம் பெறாத போலி பொறியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் தமிழக அரசு உடனடியாக மருத்துவத்துறை, வழக்கறிஞர்களுக்கு என பார் கவுன்சில் உள்ளதுபோல பொறியாளர்களுக்கு என தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும். கட்டிட பொறியாளர்களுக்கு என தனியாக வாரியம் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...