கோவையில் உயர்ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது!

கோவை நவக்கரை அருகே உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு செல்லும் பாலக்காடு சாலை நவக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர், உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமத் பைசல் (வயது18), கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர் மற்றும் அபினந்த் (வயது21) இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும், இருவரும் பெங்களூரில் இருந்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...