கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கோவை நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்விக் கடன் பெறுதல், வழிகாட்டுதல் குறித்த அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் பாண்டிய ராஜன், முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் வணங்காமுடி, நிர்மலா கல்லூரி முதல்வர் ஜி.எஸ்.மேரி பாபிலோ அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும் வெற்றியாளர்களாக திகழச்செய்யும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக நான் முதல்வன்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல் மற்றும் பன்முகத் திறமையினை மேம்படச் செய்வதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.



மேலும், கோவை மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் சமூகத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கவேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? அதற்கான திறமைகள் மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக வழங்க வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்பினை தலைமையாசிரியர்கள் சிறப்பாக பயன்படுத்தி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...