பல்லடத்தில் தென்னை சாகுபடி குறித்த வயல்மட்டக் கள ஆய்வு - செய்தித்துறை அமைச்சர் பங்கேற்பு!

பல்லடம் அருகே பெருந்தொழுவு ஊராட்சியில் நடைபெற்ற தென்னையில் பூச்சி நோய் மற்றும் உர நிர்வாகம் குறித்த வயல்மட்ட களஆய்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தென்னையில் பூச்சி, நோய் மற்றும் உர நிர்வாகம் குறித்த வயல் மட்ட களஆய்வு நடைபெற்றது.



இந்த ஆய்வானது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையிலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் முன்னிலையிலும் நடைபெற்றது.

இது குறித்துப் பேசிய செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,



தமிழக அரசு தென்னையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

நீண்ட கால பயிரான தென்னையில் நோய் பாதிப்பு என்ற சூழ்நிலையை நீக்க வேண்டும் என்கிற வகையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 52 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத்,



இயற்கை உரங்களை பயன்படுத்தி தென்னை மகசூலை அதிகரிக்கவும் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

இந்த களஆய்வில் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள், வேளாண் இணை இயக்குநர் மாரியப்பன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள், மற்றும் தென்னை விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...