திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி!

திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன கட்டுமான சுவர் சரிந்து விழுந்ததில், கட்டிட தொழிலாளி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலியானார்.

திருப்பூர் - கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா(40). இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராம்மூர்த்தி(50), பிரவீன்(22) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.



இன்று மதியம் இருவரும் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கட்டடத்தின் ஒரு பகுதியில் இருந்த சுவர் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுவர் விழுந்து படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலத்த காயமடைந்த பிரவீனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக சேர்த்தனர்.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், ராமமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...