வால்பாறையில் குழந்தைகள் காப்பகம், கோயிலை சேதப்படுத்திய யானைகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த 4 காட்டு யானைகள், அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், ரேஷன் கடை, கோவில் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நான்கு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.



அப்போது, அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், கோவில், நியாய விலை கடை, எஸ்டேட் பொருட்கள் வைக்கும் அறை ஆகியவற்றின் ஜன்னல், கதவு, சுவர், உள் இருந்த பொருட்கள் போன்றவற்றை உடைத்து சூறையாடின.



பின்னர் அந்த காட்டு யானைகள், எஸ்டேட் வாகனத்தின் மூலம் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.



காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் வனத்துறையினர் தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...