தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக போராட்டம் - கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கைது!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்டதை கண்டித்து, மாலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்த நிலையில், தமிழக அரசு இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



கோவை: கோவை சரவணம்பட்டி அருகே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அந்த கட்சியின் மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தனியார் மாலினை முற்றுகையிட முயன்றனர்.



ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.



அப்போது போராட்டகாரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.



இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசு இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிட்டால் திரையரங்குக்குள் புகுந்து திரைப்படத்தை வெளியிடாமல் தடை செய்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே தனியார் மால் பகுதிக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...