கேரளாவிற்கு கடந்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் - கோவையில் 2 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நடத்திய வாகனசோதனையில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்த போலீசார், வாகனம் மற்றும் ரேஷன் அரிசியின் உரிமையாளரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் ஐ.பிஎஸ் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று இரவு 09.00 மணிக்கு கோவை சிங்காநல்லூர் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் பொது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 21 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த வாகனத்தை ஓட்டி வந்த வல்லரசு, அவருக்கு உதவியாக வந்த நல்ல மணி என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் சிங்காநல்லூர் நெசவாளர் காலனி, நீலி கோனம்பாளையம் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவின் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று வரும்படி கொழிஞ்சாம்பாறை சேர்ந்த காஜா என்பவர் தங்களை ஆட்டோவை கொடுத்து அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, வல்லரசு மற்றும் நல்லமணி ஆகிய இருவரையும் கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வாகனம் மற்றும் அரிசியின் உரிமையாளரான கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த காஜா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...