பெண் ஆய்வாளர் மீது பொய் புகார் கொடுக்க வந்த பெண்கள் - எச்சரித்து அனுப்பிய கோவை சரக டிஐஜி!

கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு பெண் ஆய்வாளர் ஒருவர் மீது பொய் புகார் அளிக்க வந்த 2 பெண்களை டிஐஜி விஜயகுமார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து டிஐஜி விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.


கோவை: கோவை ரெட் பீல்ட் பகுதியில் உள்ள கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு நேற்று இரண்டு பெண்கள் புகார் அளிக்க வந்தனர்.

அந்தப் புகார் மனுவில் பெண் ஆய்வாளர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுவை பார்த்த டிஐஜி விஜயகுமார், அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.

அதில், அந்த பெண்கள் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அது குறித்து ஆய்வாளர் எச்சரித்ததால் அவர் மீது புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிஐஜி விஜயகுமார் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...