வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி - 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.


கோவை: வால்பாறையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் விளையாடினர். இந்த கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி செல்வம் கலந்துகொண்டார்.



இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் விளையடின. இறுதிப் போட்டியில் பொன்னமராவதி மற்றும் வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் ஆகிய அணிகள் மோதியது.



இதில் வாட்டர் ஃபால்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசாக கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...