உக்கடம் கழிவு நீர் தொட்டியில் சட்டவிரோதமாக தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு - ரூ.50,000 அபராதம் விதிப்பு!

உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் சட்ட விரோதமாக தொழிற்சாலையின் நச்சுக் கழிவு நீரை கொண்டு வந்து இறக்கிய கழிவுநீர் வாகன உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை உக்கடம் கழிவுநீர் தொட்டியில் அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுநீரை கலந்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-ல்‌ உக்கடம்‌ சாக்கடை இணைப்பு இல்லாத (UGD) பகுதிகளில்‌ உள்ள வீடுகளில்‌ சேகரிக்கப்படும்‌ கழிவுநீரை வாகனத்தின்‌ மூலம்‌ சேகரித்து மாநகராட்சி கழிவு நீர் ஊற்றும்‌ இடத்தில்‌ இறக்கப்பட்டு, பின்‌ உக்கடம்‌ STP சென்று சுத்திகரிக்கப்பட்டு நல்ல நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில்‌ வெளியேறும்‌ நச்சு கழிவு நீரை இன்று (17.05.2023) மதியம்‌ 12.00 மணிக்கு TN 48 AZ 4780 என்ற வாகனத்தில்‌ எடுத்து வந்து உக்கடம்‌ கழிவுநீர்‌ தொட்டியில்‌ இறக்கும்‌ பொழுது துர்நாற்றம்‌ மற்றும்‌ பச்சை நிறமாக நுரையுடன்‌ வெளியேறியது.

இதுகுறித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்‌ விசாரணை செய்ததில்‌ முன்னுக்கு பின்‌ முரணாக பேசி பணி செய்ய விடாமல்‌ தடுத்த வாகன உரிமையாளா்‌ பழனிசாமி என்பவருக்கு ரூ.50,000 அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, காவல்துறையின்‌ மூலம்‌ வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும்‌ காலங்களில்‌ தொழிற்சாலை மற்றும்‌ பிற வணிக நிறுவனங்களிடமிருந்து வெளியேறும்‌ நச்சுக் கழிவுநீரை உக்கடம்‌ பகுதிக்கு கொண்டு வந்து இறக்கினால்‌ அவர்கள்‌ மீது, அபராதம்‌ விதிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...