பல்லடம் அருகே வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதம் - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட 2 கூலி தொழிலாளிகளின் குடும்பங்கள், தங்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை அடுத்த எம்ஜிஆர் நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளியான கருப்பசாமி தனது மனைவி தேவி மற்றும் தனது மகனுடன் நான்கு வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சூறைக்காற்றில் சிக்கி கருப்பசாமி வீட்டின் மேற்கூரை முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. இதில் வீட்டின் உள்ளே இருந்த கருப்புசாமியின் மனைவி தேவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் மேற்கூரை சூறைக்காற்றில் சிக்கி தூக்கி எரியப்பட்டதில், மின்விசிறி, தொலைக்காட்சி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தது.



வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் தங்குவதற்கு இடமின்றி கருப்பசாமியின் குடும்பத்தார் தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேபோன்று கருப்பசாமியின் வீட்டிற்கு அருகேயுள்ள 2 ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.



சூறைக்காற்றில் சேதம் அடைந்த குடும்பத்தாருக்கு அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...