கோவை மாநகரில் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் - டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார்!

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையில் பெண் காவலர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டு, கனரக வாகன பயிற்சி முடித்த 14 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார். 

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகரில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காவல்துறையில் பெண்கள் இல்லாத பிரிவுகளில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களில் கனரக வாகனம் ஓட்ட விருப்பமுள்ள காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு காவல்துறை சார்பில் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சியில் காவல்துறை பேருந்து, வஜ்ரா வாகனம் உள்ளிட்ட அனைத்து வகை கனரக வாகனங்களும் ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் கனரக வாகனங்கள் ஓட்டி பயிற்சி பெற்ற 14 பெண் காவலர்களுக்கு பேட்ச் போடப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பெண் காவலர்களுக்கு வழங்கினார். 

அதேபோல மோப்பநாய் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு இளம் பெண் பட்டதாரி பெண் காவலர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...