ரூட்ஸ் குழுமங்களின் சார்பில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவையில் செயல்பட்டு வரும் ரூட்ஸ் குழும நிறுவனங்களில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ரூட்ஸ் கம்பெனி வளாகத்தினுள் பாதுகாப்பு வாசகங்களின் பேனர்கள் அனைத்து பணியாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பணியாளர்கள் தங்களது பணிகளை துவங்குவதற்கு முன்பு ஒன்றுகூடி பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு தினம் குறித்த சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.



இதன் துவக்க விழாவில் ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் பங்கேற்று பாதுகாப்பு குறித்த கருத்துரை வழங்கினார்.



தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள், விழாவினைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில், சரகம் ஒன்று மற்றும் இரண்டின் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இணை இயக்குநர்கள் பி.என்.சங்கர் மற்றும் எம்.வி.செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, ரூட்ஸ் காஸ்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம் விழாவில் பங்கேற்று பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் சபீனா மற்றும் வந்தே மாதரம் ஏ.மாதவன் ஆகியோர் பங்கேற்று "தொழில்சாலையில் பாதுகாப்பு" என்ற தலைப்பில் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சியினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "தொழிற்சாலையில் பாதுகாப்பிற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது" என்ற தலைப்பில் பணியிடச் சூழலே, பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற இருவேறு கருத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.



இதில், பணியிடச் சூழலே என்ற கருத்தை முன்வைத்து ஆர்.ராஜ்குமார், ஆர்.சுகுமார், எம்.பாரதிராஜா ஆகியோரும், பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற கருத்தை முன்வைத்து எஸ்.டி.செந்தில்குமார், என்.செந்தில்ராஜா, ஆர்.சதீஸ் ஆகியோரும் பேசினர். இப்பட்டிமன்றத்தில் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட்., மற்றும் கோவை உபமண்டலம், தேசிய பாதுகாப்பு குழுமம் உறுப்பினர் துணை மேலாளர் (பாதுகாப்பு) சி.ராஜேஷ்வரன் நடுவராக செயல்பட்டார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...