உடுமலையில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலம்..! - 2000 கலைஞர்கள் பங்கேற்று அசத்தல்

உடுமலை அருகே உலக சாதனைக்காக நடைபெற்ற பவளக்கொடி வள்ளி கும்மியாட்டத்தில் இராண்டாயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடினர்.



திருப்பூர்: அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒன்றாக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த அசத்தல் ஆட்டத்தை ஏராளமானோர் ஒன்றுகூடி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்குபெறும் பவள கொடி கும்மியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



அழிந்து வரும் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் பள்ளியொன்றில் நடைபெற்ற பள்ளி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் இடம்பெற்றன.



குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர்.



உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி முன்னாள் தலைவர் சி வேலுச்சாமி, சக்தி கலைகுழு ஆசிரியர் மகாலிங்கம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் கருப்பாயி, ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன வள்ளி ராஜசேகரன், ரயில்பயணிகள் ஆலசோணை குழு உறுப்பினர் உடுமலை சத்யம் பாபு, உடுமலை ஓன்றிய துணை செயலாளர் உரல்பட்டி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...