சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு – திருப்பூர் மாவட்டத்தில் 766 வழக்குகளுக்கு தீர்வு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடந்தது. இதில் 2387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 766 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



திருப்பூர்: மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு ஏழு அமர்வுகளாக நடைபெற்றது.

மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, குடும்ப நல வழக்கு, சமரசத்துக்குரிய குற்ற வழக்கு,காசோலை மோசடி, வங்கி வாராக்கடன் வழக்கு என பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு மொத்தம் 7 அமர்வுகளாக நடந்தது.

திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் முன்னிலையில் நடந்தது. இதில் 2387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 766 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மொத்த மதிப்பு ரூ. 28 கோடியே 51 லட்சத்து 60 ஆயிரத்து 936 ஆகும். மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 248-க்கு ரூ. 20 கோடியே 89 லட்சத்து 51 ஆயிரத்து 521 மதிப்பிலும், 68 சிவில் வழக்குகளுக்கு ரூ. 6 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 141-ம் என, 7 குடும்ப நல வழக்குகளுக்கு ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம், சமரசத்துக்கு உரிய குற்ற வழக்குகள் 415-க்கு ரூ. 16 லட்சத்து 39 ஆயிரத்து 700, 13 காசோலை மோசடி வழக்குகளின் மதிப்பு ரூ. 50 லட்சத்து 95 ஆயிரம், 15 வங்கி வராக்கடனின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சத்து 5 ஆயிரத்து 574 என பல்வேறு வழக்குகளுக்கு சமரசத்தீர்வு எட்டப்பட்டது.

நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன், நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்கறிஞர்கள் பழனிசாமி மற்றும் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...