நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மாமன்ற உறுப்பினர்கள் நேரில் முறையீடு

கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வரும்நிலையில், நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும். இதனால் நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் சத்தி சாலை பாரதி நகர் அருகே இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான உணவு கிடங்கிற்கு செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரப்பாதை உள்ள நிலையில் பாதையை சீரமைக்கும் பணிகளை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது எனவும் அதன் ஒரு பகுதியாக சத்தி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அந்தப் பாதையில் முடியும் இடத்தில் நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வாயில் கதவு அமைய உள்ளதாக அறிவதாகவும், அந்தப் பாதையை கோவை மாநகராட்சியின் 20, 26, 28வது வார்டு பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வரும் நிலையில் நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நுழைவாயில் பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அப்பாதையை செப்பனிட்ட பிறகு கடந்த காலங்களை போலவே பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் உரிய ஏற்பாடுகளை உணவுக் கழக நிர்வாகம் செய்திட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.



இந்த மனுவை 20வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26 வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 28 வது வார்டு கவுன்சிலர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...