தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோட்டாட்சியரிடம் மனு!

தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் போக்குவரத்து பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் சுமார் 45 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் உள்ள மேற்கு அரிசன காலனி அருகில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகவே ஊருக்குள் செல்ல முடியும்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கனகு என்பவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் செந்தில் அரசன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...