அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு - மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி!

தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கேசவன் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கேசவன் (56). இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரரும் தற்போது காங்கயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாகன ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கேசவன் தனது மனைவி பரிமளா (46) மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு முத்தூர் அருகே உள்ள ராசாத்தாவலக கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார்.



இந்தநிலையில் கேசவன் நேற்று மதியம் 3.30 மணிக்கு கோவில் முன்புறம் சாலையோரத்தில் நடந்து சென்றார். அப்போது முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக கேசவன் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கேசவனை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு கேசவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் அவரது உடல் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அப்போது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேசவனுக்கு முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் முன்னாள் ராணுவ வீரர் மயில்சாமி தலைமையில் மூவர்ண கொடியுடன் ஊர்வலமாக வந்து அவரது உடலுக்கு மூவர்ணக் கொடி மூர்த்தி சல்யூட் அடித்து வீர வணக்கம் செலுத்தினர்.



அப்போது தாராபுரம் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...