சுதந்திர தின விழா - பள்ளியில் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஆட்சியர்

திருப்பூரில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மரியாதை செய்தார். பின்னர் தான் பயின்ற பள்ளியின் ஆசிரியரின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.



திருப்பூர்: சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியதை செலுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக்கல்லூரியில கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.



சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 34,36,633 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தான் படித்த பள்ளியின் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.



திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழாவில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தந்தையும், குணச்சித்திர நடிகருமான சின்னி ஜெயந்த் கலந்து கொண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...