நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் விழா - நிர்வாகிகள் புகார்!

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான வழக்கில், அமைப்பின் செயல்பாடுகளுக்கும், அமைப்பின் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், கொசினா சார்பில் நாளைய தினம் விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள விழாவை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2021ஆம் ஆண்டு கொசினா நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தல் செல்லாது என கோவை மாவட்ட பத்திர பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சங்கத்தின் பெயரை பயன்படுத்தி எந்த செயல்பாடும் செய்யக்கூடாது, விழாக்கள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. சங்கத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.

இதனிடையே கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கம் பெயரை பயன்படுத்தி சிலர் கோவையில் முப்பெரும் விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆர் எஸ் புரம் கலையரங்கத்தில் வரும் 16ம் தேதி விழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சங்கம் தொடர்பான செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தடையை மீறி சிலர் விழா நடத்த ஏற்பாடு செய்திருப்பது சங்க உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், விழா நடத்த அனுமதிக்க கூடாது என சங்க நிர்வாகத்தின் சார்பில் பத்திரப்பதிவு, கோவை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...