தாராபுரம் அருகே சொத்து தகராறில் தம்பியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அண்ணன் - பரபரப்பு!

தாராபுரம் அடுத்த ஓடையன்காடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பழனிசாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அண்ணன் பழனிசாமி, தம்பி ஈஸ்வரமூர்த்தியை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறில் சொந்த தம்பியை அண்ணனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் ஓட்டையன்காடு தோட்டத்தில் வசித்து வருபவர்கள் விவசாயி ஈஸ்வரமூர்த்தி (63) - முத்துலட்சுமி (45) தம்பதி. இவர்களுக்கு இளங்கவி என்ற மகனும், வாணிஸ்ரீ‌ என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்தில் இருந்து கறவை மாட்டில் பால் கறந்துவிட்டு பால் காரரிடம் விற்பனை செய்வதற்காக டி.வி.எஸ் எக்ஸ்.எல் சூப்பர் பைக்கில் காலை 5 மணி அளவில் தோட்டத்திலிருந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தின் வெளியே வந்த பொழுது தனது சொந்த அண்ணன் பழனிச்சாமி (65) (சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்) பின்னாலிருந்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, அரிவாளால் வெட்டியுள்ளார்.



வெட்டு காயங்களுடன் கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தாராபுரம் போலீசார் கூறியதாவது, அண்ணன் பழனிச்சாமிக்கும், தம்பி ஈஸ்வரமூர்த்திக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்ணன் பழனிச்சாமி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறின் காரணமாக அண்ணன் தம்பியை வெட்டிக் கொலை செய்துள்ளார்.



இந்த கொலை சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான தாராபுரம் போலீசார்‌ வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ஈஸ்வரமூர்த்தியின் அண்ணன் பழனிச்சாமியை தாராபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறில் சொந்த அண்ணனே, தம்பியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...