அரசு அறிவித்த ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - போராட்டத்தில் குதித்த டேன் டீ தொழிலாளர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தபடி ஒரு நாள் ஊதியமான 425 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று வால்பாறை அருகே டேன் டீ தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஊதிய பற்றாக்குறை மற்றும் வனவிலங்கு பிரச்சனையால் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. இதில் சின்கோனா,சின்னக்கல்லார், பெரியகல்லார், நீரார், உபாசி,ரயான், ஆகிய எஸ்டேட்டுகள் அரசு தேயிலைத் தோட்ட நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதை அரசு இரண்டு ஆண்டுக்கு முன்பு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சராசரி ஒரு நாள் ஊதியமாக 425 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட்டது. தற்போது தனியார் எஸ்டேட் நிறுவனங்களில் இந்த 425 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம் பற்ற குறை, வனவிலங்கு பிரச்சனை அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறோம். அரசு அறிவித்த 425 ரூபாய் சம்பளத்தை டேன் டீ நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.



இதனிடையே, வால்பாறை அருகே உள்ள ஊபாசி எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் அலுவலகத்திற்கு முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...