தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு!

வரும் 21ஆம் தேதி தாராபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதையொட்டி, விழா ஏற்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கோவில் நிர்வாகத்துடன் போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்ச கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய காவல் நிலைய வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தாராபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் கோவிலில் பராமரிப்பு மற்றும் மராமத்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த கும்பாபிஷேக விழாவிற்கு 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால் கும்பாபிஷேகம் நடைபெறும் வரும் 21-ஆம் தேதி எவ்வாறு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டும் எவ்வாறு பொதுமக்களை கூட்ட நெரிசலில் இல்லாமல் தரிசனத்திற்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில் தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நகர் மன்ற தலைவர் பாபு கண்ணன் திமுக நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.‌

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...