மோடி ஆட்சியில் அனைவரும் தங்கள் உரிமைக்காக போராடும் சூழல் உள்ளது!

மோடி ஆட்சியில்  பெண்கள் தங்களது உரிமைக்காவும், மாணவர்கள் நல்ல கல்விக்காகவும்,  தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது உரிமைக்காகவும் பழங்குடிகள் நீதிக்காகவும் போராடி வருகின்றனர். மணிப்பூர் ஹரியானா எரிந்து கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி உறங்கிக்கொண்டு இருக்கிறார் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தேவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.



திருப்பூர்: மோடி ஆட்சியில் அனைவரும் தங்கள் உரிமைக்காக போராடும் சூழல் உள்ளது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தேவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி K.காளிமுத்துவின் புதுமனை விழா திருப்பூர் மாஸ்கோ நகரில் இன்று நடைபெற்றது. இதில்அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன்கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவராஜன் பேசியதாவது, இந்தியா கூட்டணியில் அகில இந்திய பார்வார்டுபிளாக் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியில் திமுக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் இந்தக்கூட்டணி செயல்படுகிறது.

இந்தியா கூட்டணியின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த மாதம் 17, 18 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது.அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதுதீர்மானம் எடுக்கப்பட்டது. " இந்தியா" கூட்டணியின்மூன்றாவது கூட்டம் மும்பையில் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம் இந்தியா முழுவதும் பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில், தோற்கடிக்க வேண்டுமென்பதே ஆகும். எங்கெங்கு வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம், பொதுவான நபரை வேட்பாளராக்கி பாஜகவை தோற்கடிப்போம் என்றார். பாஜக விற்கு, எதிரானவர்களின் ஓட்டுக்கள் சிதறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 33% சதவிகித ஓட்டுக்கள் மட்டுமே பாஜகவிற்கு கிடைத்துள்ளது.

மீதமுள்ள 67% ஓட்டுகள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். வருகின்ற தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த 67% ஓட்டை சிதறாமல் பெறுவதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் புகழ் குறைந்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, புதிய பொது நிறுவனங்கள்தொடங்கவில்லை.சமுதாய நல்லிணக்கம் இல்லை. இதுகுறித்து கேட்கும்போதும் நரேந்திர மோடி வகுப்பு வாதபிரச்சனைகளை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டினார்.

தொழிலாளர்கள், விவசாயிகள் , மத்திய வணிக அமைப்புகள் நாளைபுதுடெல்லியில் கூட்டம் நடத்துகின்றன. அவர்களுடைய நீண்ட நாள் பிரச்சனை குறித்து விவாதிக்க இருக்கின்றனர். 

மோடி ஆட்சியில்பெண்கள் தங்களது உரிமைக்காவும், மாணவர்கள்நல்ல கல்விக்காகவும், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது உரிமைக்காகவும் பழங்குடிகள் நீதிக்காகவும் போராடி வருகின்றனர்.

மணிப்பூர் ஹரியானா எரிந்துகொண்டிருக்கிறது. நரேந்திர மோடி உறங்கிக்கொண்டு இருக்கிறார். இது பாஜகவிற்கு எதிரானவர்கள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. நாங்களும் தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...