உடுமலை அருகே சாலையில் உலா வந்த படையப்பா யானை - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை , உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்டதும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மறையூர் பேருந்து நிலையம் பகுதியில் படையப்பா யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை, உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களும் அச்சமடைந்து வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.



ஆனால் அந்த யானை எந்தவித அசம்பாவிதமும் செய்யாமல் சாலையை கடந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்தை நோக்கி சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...