மூலனூர் அருகே ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் கயல்விழி!

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, 5 அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 269 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



தாராபுரத்தை அடுத்த மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 5 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 269 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.00 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இதனையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,



தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று துவக்கி வைத்தார்கள்.

அனைத்து குழந்தைகளும் சத்துக்குறைவின்றி கல்வி கற்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும். மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது.

அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. கல்விதான் வாழ்வை மேன்மையடைய செய்யும். மேல்நிலை வகுப்புகள் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் நாம் என்ன படிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தால் அதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் செய்து தர தயாராக உள்ளார்.

இது போன்ற வாய்ப்புகளை மாணவர்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற அடைப்படையில் தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்பட்டது.

ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு கல்வி அடிப்படையாகும். கல்வியினால் அறிவைப் பெறலாம். பொருளாதரத்தில் முன்னேற்றம் அடையலாம். நமது உரிமையை பெறுவதற்கு கல்வி மிகவும் அவசியம். மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கிறீர்கள்.

இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய கல்வி முறைகள் மாறி வருகிறது. நமது எதிர்காலத்திற்கு எந்த படிப்பு தேவையோ அதை படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

அந்த வகையில் இன்றைய தினம், மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 85 மாணவர்களுக்கும், மூலனூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 56-மாணவர்களுக்கும், கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 80-மாணவர்களுக்கும், வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 16 மாணவர்களுக்கும், புதுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 32 மாணவர்களுக்கும் என மொத்தம் 269 மாணவ-மாணவியர்களுக்கு ரூ.13,00,040/- மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் பத்மநாபன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆனந்தி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி, மூலனூர் பேரூராட்சி தலைவர் தண்டபானி, கன்னிவாடி பேரூராட்சி ரேவதி சுரேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...