லாரி மோதி காட்டு மாடு சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம் - ஓட்டுநரை பிடித்து காவல்துறை விசாரணை

கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: லாரி மோதி உயிரிழந்த காட்டுமாடு பிரேத பரிசோனை செய்யப்பட்டது. இதில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் காட்டு மாடுகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. இவைகள் ஆனைகட்டி கோவை சாலையில் அவ்வப்பொது கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே காட்டு மாடுகள் இரண்டு சாலையை கடந்துள்ளன. அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டு மாடு காயமடைந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இன்று காலை சுமார் கோவை வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோனையில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...