மழை வெள்ளத்தால் செங்கத்துறை தடுப்பணை சேதம் - சீரமைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.


கோவை: தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் மழையால் சேதமடைந்த தடுப்பணையை இதுவரை சீரமைக்கவில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தடுப்பணை சேதம் அடைந்ததனால் அப்பகுதியை சுற்றிலும் உள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அப்பணிகள் எந்த துறையை சார்ந்தது என்பது தெரியாத பட்சத்தில் விவசாயிகளே அணையை சீரமைத்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறும் மனுவில் பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...