பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி - இடிந்து விழும் முன்பே சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

உடுமலையில் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது.



குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளதா மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ராமசாமி நகரில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதனால் தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. அத்துடன் குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளது.



அதுமட்டுமின்றி தொட்டி நிறைந்து வெளியேறும் தண்ணீர் வழிந்து செல்வதில்லை. மாறாக தொட்டியின் கீழ் புறத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் தொட்டி படிப்படியாக வலுவிழந்து நாளடைவில் முற்றிலுமாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...