உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடசே பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நிறைவு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா கடந்த 26 ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் இறுதி நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம் ஹோமமும், மகாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், மஹாநிவேதனம், கோஷ்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழாவில் கலந்து கொண்டால் தீர்க்காயுள், சந்ததிகள், செல்வம், புகழ், தேக ஆரோக்கியம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் உண்டாகும் துக்கங்கள், சத்துருக்களால் ஏற்படும் பயம் மற்றும் வியாதிகள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா கடந்த 26 ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் இறுதி நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம் ஹோமமும், மகாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், மஹாநிவேதனம், கோஷ்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.



விழாவையொட்டி வெங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



மேலும் பக்தி இன்னிசை நிகழ்வில் பெண்கள் கும்மியாட்டத்தில் ஆடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்த விழாவானது வைணவ ஆலயங்களில் செய்யப்பட வேண்டிய நித்திய பூஜைகள், நைவேத்தியங்கள், வழிபாட்டு முறைகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் தவறுதலாக உண்டாகும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவதற்கு நடத்தப்பட்டது.



இதில் கலந்து கொண்டால் தீர்க்காயுள், சந்ததிகள், செல்வம், புகழ், தேக ஆரோக்கியம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் உண்டாகும் துக்கங்கள், சத்துருக்களால் ஏற்படும் பயம் மற்றும் வியாதிகள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...