தாய்மார்களின் சகோதரனாக பிரதமர் மோடி மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை குறைத்துள்ளார் - வானதி சீனிவாசன் பெருமிதம்!

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற ரக்‌ஷா பந்தன் விழாவில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் மக்கள் பயனடைந்து உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: தாய்மார்களின் சகோதரனாக மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் முன் களப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடினார்.



பின்னர் முன் கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த விழாவில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசியதாவது,



ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி இந்திய நாட்டு சகோதரிகள் நலம் பெறும் வகையில் ஒரு சகோதரனாக சமையல் கேஸ் விலையை குறித்து மானியத்தை அதிகப்படுத்தி உள்ளார். ஒரு சகோதரனாக, சகோதரிக்கு அண்ணன் செய்வதை போன்று நாட்டு மக்களுக்கு மோடி மானியத்தை குறைத்து உள்ளார்.

நாட்டிலேயே 75 லட்சம் மக்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கிறார்கள். இது வரவேறக் கூடிய ஒன்று நாட்டு மக்கள் சகோதரிகள் இதனால் நலம் பெற உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...