தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் - கோவையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோவையில் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...