திருப்பூரில் பட்டப்பகலில் காதலி கழுத்து அறுத்து கொலை… தற்கொலைக்கு முயன்ற காதலனிடம் போலீசார் விசாரனை..!

திருப்பூரில் பட்டப்பகலில் காதலியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் உள்ள காதலனிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தனியார் மருத்துவமனை பெண் ரிசப்ஷனிஸ்டை கழுத்தை அறுத்து கொன்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முழு விசாரனைக்குப்பிறகே காதலியை எதற்காக காதலன் கொன்றான் என்ற விவரம் தெரியவரும்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் மணிவண்ணன்.



இவரது மகள் சத்யஸ்ரீ. இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த சத்தியஸ்ரீ பணியை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த நரேந்திரன் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருந்தார். திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நரேந்திரன் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்யஸ்ரீ கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



ரத்த வெள்ளத்தில் விழுந்த சத்யஸ்ரீயை அப்பகுதியினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். நரேந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் நரேந்திரனிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...