துடியலூர் அரவான் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..!! பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம்.!

கோவை துடியலூர் அரவான் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை: 300 ஆண்டுகள் பழமையான அரவான் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோபுர கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

கோவை துடியலூர் அரவான் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை துடியலூரில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ அரவான் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் அரவான் திருவிழாவானது குருடி மலை அடிவாரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், ஆரப்பாளையம், தாலியூர், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை, பழனிகவுண்டர்புதூர், அப்பநாய்க்கன்பாளையம், வடமதுரை, வெள்ளகிணர், சுப்பிரமணியம் பாளையம், காசிநஞ்சகவுண்டன்புதூர், ராக்கிபாளையம், வெற்றிலை காளிபாளையம், தொப்பம்பட்டி மற்றும் துடியலூர் என பதினாறு கிராமங்கள் பங்கேற்கும் விழாவாக 18 நாட்கள் நடைபெறும். அவ்வளவு பெருமை வாய்ந்த கோயில் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கடந்த 1-ம் தேதி முளைப்பாரி, தீர்த்த குடங்களுடன் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மன் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து 2ம் நாளில் முதல் கால வேள்வி பூஜை தொடங்கியது. அதனையடுத்து இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் இரண்டாம் கால வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதனை அடுத்து யாகசாலை மண்டபத்தில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு திருக்கோயிலை வலம் வந்தது.



பின்னர், கோவிலின் கோபுர கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...