பல்லடம் அருகே டாஸ்மாக் கடை மூடும் அறிவிப்பை பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் அந்த டாஸ்மாக் கடை செயல்படாது என தாசில்தார் அறிவித்ததை பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் இன்று முதல் செயல்படாது என தாசில்தார் அறிவித்ததை பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள 1830 டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் விபத்துக்கள் மட்டுமின்றி கொலை கொள்ளைக்கு காரணமாக இந்த கடை இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் கள்ளகினர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் சார்பில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.



அதன்படி இன்று நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



பேச்சுவார்த்தை முடிவில் இந்த டாஸ்மார்க் கடை இங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கடை இடமாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....